கொழும்பில் விபசார விடுதிகள் பொலிஸாரால் சுற்றுவளைப்பு! – 4 பெண்கள் உட்பட ஐவர் சிக்கினர்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று திடீரென பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெண்கள் நால்வர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராஜகிரிய, வெலிக்கடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதிகள் இரண்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

இதன்போது 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஆண் விபசார விடுதியொன்றின் முகாமையாளராகச் செயற்பட்டுள்ளார்.

கைதுசெயய்யப்பட்ட பெண்கள் 25 – 47 வயதுக்கு உட்பட தனமல்வில, வெல்லம்பிட்டிய, கரந்தெனிய மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான விபசார விடுதியின் முகாமையாளர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *