ஏழுமலையானை தரிசிக்க மனைவியுடன் திருப்பதி பறக்கிறார் மஹிந்தவின் மகன்!
மஹிந்த ராஜபக்சவின் கடைக்குட்டி மகனான ரோஹிதவும் , அவரது மனைவியும் இன்று (13) மாலை இந்தியா பயணமாகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகவே இருவரும் அங்கு செல்கின்றனர் என்றும், கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர் ஒருவரே இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
அத்துடன், தாஜ்மஹால் உட்பட இந்தியாவிலுள்ள முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்கும் புதுமணத் தம்பதி திட்டமிட்டுள்ளது.