வடக்குப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சி கட்டாயம்! – 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு

வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் உடற்பயற்சி – யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சு.

முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்படவேண்டும் என்பதை விளக்கி இறுவட்டையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இணைத்து யோகா உடற்பயிற்சி காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 நிமிடங்களை கொண்டமைந்துள்ளது.

இந்தக் காணொளியில் வரும் மூன்று உடற்பயிற்சிகளை மாணவர்கள் காலை வழிபாட்டின்போது மேற்கொள்ளவேண்டும்.

இது தொடர்பில் வலயங்களிலுள்ள விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்களுக்கு 12ஆம் திகதி அறிவித்தல் வழங்கப்படும். அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மாகாணத்திலுள்ள தரம் 6 தொடக்கம் 13 வரையுள்ள பாடசாலை மாணவர்கள் இரண்டு நாட்கள் இந்த உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும் என்று மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *