கிழக்கு ஆளுநராக அசாத் சாலி நியமனம்!

கிழக்கு மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. ஆளுநர்கள் நியமனத்தில் முஸ்லிம் நியமிப்பதில் கவனம் செலுத்திய ஜனாதிபதி இவ்வாறு நியமனத்தை வழங்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

இன்று பி.ப. 2 மணிக்கு அசாத் சாலி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளர். இச் சந்திப்பின் பின்னர் வழங்கப்படும் குறித்த நியமனம் வேறு கிழக்கு தவிர்ந்த மாகாணமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

மேலும், வடக்கிற்கு மாஷல் பெரேரா நியமனம் பெறலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய டிலான் பெரேராவின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *