இரு எதிர்க்கட்சித் தலைவர்கள்: சம்பந்தன் சொல்வது சரிதான்! – ஆமோதிக்கின்றார் ஹக்கீம்
“எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருவர் உள்ளனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவரது நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம் தெரிவித்தார்.
பிரதிச் சபாநாயகர் தலைமையில் நேற்றுக் கூடிய நாடாளமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“பிரதமர் பதவி தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானிக்க இடமளிக்காத குழுவொன்றே தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளது. ஒருவர் வேறு கட்சியில் அங்கத்துவம் பெற்றால், ஏற்கனவே உள்ள கட்சியிலிருந்து அவர் வெளியேறியுள்ளார் என்றே அர்த்தம். இதுவொரு பாரதூரமான பிரச்சினை. இது சிலருக்குப் பிரச்சினை இல்லை என்ற போதிலும், அது நாடாளுமன்றச் சம்பிரதாயத்திற்கு முரணானது” – என்றார்.