பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு: ‘கேக்’குடன் சிவாஜிலிங்கம் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64ஆவது பிறந்த நாள் இன்று. இதனை முன்னிட்டு யாழில் பல இடங்களில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில், வல்வெட்டித்துறையில் உள்ள தலைவாின் வீட்டில் பிறந்த நாள் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாா், அங்கிருந்த சிலருடைய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்தனா்.

பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அங்கு வந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கமும் கைதுசெய்யப்பட்டதுடன், அவாிடமிருந்த கேக் உள்ளிட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காகக் கொண்டுவரப்பட்ட பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

பின்பு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளின் பின் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *