புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பியிடம் மன்னிப்புக் கோரிய தமிழ் மக்கள் பேரவை!
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை என்று அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்திலிருந்து புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் தம்மிடம் மன்னிப்புக் கோரினர் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தமிழ் மக்கள் பேரவையின் அந்தச் செயற்பாடு தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.