கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் நாளை மறுதினம் சனிக்கிழமை1 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என,  தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச்  சபை அறிவித்துள்ளது.


அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியவசிய திருத்தப் பணிகள்  காரணமாக, நாளை  சனிக்கிழமை  முற்பகல் 8 மணி முதல் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை 2 மணி வரையிலான 18 மணி நேரத்திற்கு,  குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என,  சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல மா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் இரத்மலானை, சொய்சாபுர ஆகிய பிரதேசங்களிலும், இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என,  சபை மேலும்
தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *