கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு!
கொழும்பில் நாளை மறுதினம் சனிக்கிழமை1 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக, நாளை சனிக்கிழமை முற்பகல் 8 மணி முதல் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலான 18 மணி நேரத்திற்கு, குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல மா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் இரத்மலானை, சொய்சாபுர ஆகிய பிரதேசங்களிலும், இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, சபை மேலும்
தெரிவித்துள்ளது.