பஸ்ஸில் சென்ற பெண் திடீர் மரணம்!
ஹொரனவிலிருந்து பாணந்துறைக்குப் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் வைத்தே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்தின் பேரில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பற்றி நடத்துனர் விசாரித்துள்ளார்.
பின்னர் பேருந்து பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
சுமார் 60 / 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தங்களுக்கு குறிப்பிட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலீசார் கூறுகின்றனர்.