இந்தியாவிலும் ஹிட்டானது இலங்கையின் மிளகாய்த்தூள் தாக்குதல் – டில்லி முதல்வர்மீது முதல் தாக்குதல்!
இலங்கை நாடாளுமன்றத்தில் பொலிஸார்மீதும், ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள் மீதும் மஹிந்த அணியினர் கடந்த வெள்ளியன்று மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மிளகாய்த் தூள் தாக்குதல் விவகாரம் சர்வதேச அளவில் பேசப்படும் பொருளாக மாறியது. பலகோணங்களில் இலங்கை நெட்டிசன்கள் ‘மீம்ஸ்களை’யும் தயாரித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்தப்பட்டது.முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மதிய உணவு சாப்பிட சென்றார். அப்போது கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது ஆபத்தான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. டெல்லி காவல்துறையினரின் மோசமான பாதுகாப்பு முதலமைச்சர் கூட டெல்லியில் பாதுகாப்பாக இல்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.