சபையில் சொத்துகளைச் சேதப்படுத்திய எம்.பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் அரச சொத்துகளைச் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்துக்கமைய, சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கு மாத்திரமே சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச சொத்துகளைச் சேதப்படுத்தியமை தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் எனவும் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *