ரயிலுடன் மோதியது கார்! சாரதி நசியுண்டு மரணம்!!
யாழ். அரியாலைப் பகுதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட ரயிலுடன் கார் மோதியதில் காரை ஓட்டிச்சென்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள வாகன திருத்தகத்துக்கு காரினைக் கொண்டு சென்று திருத்தி விட்டு திரும்பும் வழியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.