மைத்திரியின் செயல் சட்டவிரோதம்! நீதிகோரி நீதிமன்றத்தை நாடுவோம்!! – கடும் சீற்றத்துடன் ஐ.தே.க. தெரிவிப்பு
“நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயல் சட்டவிரோதமானது” எனவும், “இது நாட்டின் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது” எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ ‘ருவிட்டர்’ தளத்தில் பதிவிட்டுள்ளது.
“நாட்டில் ஜனநாயகத்தின் மேன்மையை உறுதிசெய்யும் வகையில் இதை எதிர்த்து நாங்கள் போராடுவோம்” எனவும், “நீதி கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவோம்” எனவும் அந்த ‘ருவிட்டர்’ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.