ரூ.1,000 சம்பளத்தை வழங்கவே முடியாது! – கைவிரித்தது பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரி நிற்கும் ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை, ஒருபோதும் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும், நாளொன்றுக்கு 600 ரூபா அடிப்படைச் சம்பளத்தையே வழங்க முடியும் எனவும் இலங்கைப் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.