கொரோனா சில நாடுகளில் தீவிர பரவல் நிலையை எட்டியுள்ளது!
கொரோனா சில நாடுகளில் தீவிர பரவல் நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை பாதித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.