திருமலையில் வாள்வெட்டு! 10 பேர் படுகாயம்!!

திருகோணமலை மட்கோ மஹாமாயபுர பகுதியில் இன்று வாள்வெட்டுக்கு இலக்கான 10 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த டி.பி.அமரகீர்த்தி (47 வயது), ஆர்.தினுஷா பியந்தி (39 வயது), டி.பி. அக்சயா (22 வயது), டி. பி. டி சான் (17 வயது) ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வாளால் வெட்டியதாகக் கூறப்பட்ட மற்றைய குழுவைச் சேர்ந்த அறுவரும் 19, 24, 27, 38, 47, 52 வயதுடையவர்கள் எனவும், அவர்களும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *