நடுவீதியில் பற்றிஎரிந்தது பஸ் !
கண்டி – கம்பளை பிரதான வீதியில் பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் விடுதி முன்பாக, தனியார் பஸ் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றிஎரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
சனிக்கிழமை மாலை மேற்படி பஸ்வண்டி, கம்பலை நோக்கிப் பயனிக்கும் போதே தீப்பற்றி எரிந்துள்ளது.
தீவிபத்தால் பயணிகள் எவருக்கும் பஸ்ஸில் இருக்கவில்லை. திருத்தவேலைக்கு பஸ்ஸை கொண்டுசென்றேபோதே இச்சம்பவம் இடம்பெற்றது என்றும், சாரதியும், நடத்துனரும் வெளியேபாய்ந்து உயிர்தப்பித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
(வத்துகாமம் நிருபர்)