20 வருடங்களுக்கு பிறகு இலங்கை – குவைத்துக்கிடையே ஒப்பந்தம்
இரண்டு தசாப்த காலத்திற்குப்பின்னர் குவைத்துக்கும் இலங்கைக்குமிடையில் குவைத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் வர்த்தக மாநாட்டின் முடிவில் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட இணக்கம் காணப்பட்டது.
இந்த அமர்வின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன்
மற்றும் குவைட்நாட்டின் வர்த்தக அமைச்சர் காலித் நாசர் ருவூவும் முக்கிய பேச்சு வார்த்தையை நடாத்தியிருந்தனர்.
மாநாட்டின் முடிவில் குவைத் வர்த்தக அமைச்சர் “இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது” என பாராட்டுத்தெரிவித்தார்.