ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு ‘சிறிசேன!’ – மைத்திரிக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன தயாராகி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணையும்போது சிறிசேன குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எனவும், அப்படி இல்லை என்றால் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இதற்காக ஜனாதிபதியிடம் இருந்து இதுவரை டட்லி சிறிசேனவுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அண்மையில் அரசியல் களத்துக்கு வந்த டட்லி சிறிசேன, ஊழல் எதிர்ப்பு அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அத்துடன் ஊடகக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தனது கருத்தை நாட்டுக்கு அவர் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.