போலி சுதந்திர தினம் எங்களுக்கு வேண்டாம்! – யாழில் போராட்டம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தும் வகையில் யாழ். பஸ் நிலையம் முன்பாக நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெறவுள்ளது என அந்த இயக்கத்தின் அமைப்பாளர் யூட் தெரிவித்தார்.

‘போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம்’ என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுளைத் தேடித்தருமாறும், நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *