இலங்கை ஜனாதிபதிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்: 200 கோடிக்கு என்ன நடந்தது?

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட அதி சொகுசு வாகனங்களினால் 200 கோடிக்கும் அதிகமான வாடகைப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது அவற்றுள் இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், சில வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மூவர் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட அதி சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய இரண்டாயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வாடகைப் பணத்தை செலுத்தத் தவறியுள்ளனர்.

இதன்படி, அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கான மதிப்பிடப்பட்ட வாடகை 2,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும், இவற்றில் இரண்டு வாகனங்களை தற்போது காணவில்லை எனவும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பான வழக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமரசிங்க, இந்த வாகனங்களை 2006ஆம் ஆண்டு முதல் மூன்று ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன.

எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தத் தவறியதால், செலுத்தப்படாத தொகைக்கு 3 தொடக்கம் 4 வீதமான மாதாந்திர வட்டி வசூலிக்க சம்பந்தப்பட்ட வாகன நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, வரவு செலவு திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள் என்பதில் சிக்கல் இருப்பதாக கூறியிருந்தார். இது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *