மீண்டு வரும் இலங்கை, வளர்ச்சி பாதையில் இந்தியா உலக வங்கி கணிப்பு!

இந்த ஆண்டு (2024) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நிதியாண்டிற்கான கணிப்புகளை உலக வங்கி திருத்தியுள்ளது.

இந்த ஆண்டு தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 6.0 சதவீதமாக வலுவாக உள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானும் இலங்கையும் எதிர்பார்த்ததை விட மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

தெற்காசிய அபிவிருத்தி அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் 2024-2025 நிதியாண்டில் 2.3 சதவீதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இலங்கையில், கையிருப்பு, பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் மிதமான மீட்சியுடன், 2025-இல் உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி உலகிலேயே மிக வேகமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

2025ஆம் ஆண்டில் தெற்காசியாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *