விபத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது, இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அளுத்கம மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த எச்.எம். ஹர்ஷன பிரதீப் என்ற உழவு இயந்திரத்தை ஓட்டிய நபரே காயமடைந்து சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த அலி சப்ரி ரஹீமின் காரும், அதே திசையில் பயணித்த உழவு இயந்திரமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ali sabri raheem accident today

விபத்து தொடர்பில் அலி சப்ரி ரஹீம் பயணித்த காரின் சாரதி சாலியவெவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *