அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர் தந்தையானார்!

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் ஒருவர், குழந்தை ஒன்றிற்கு தந்தையான ஆச்சரிய நிகழ்வொன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்

மஹாராஷ்ட்ராவிலுள்ள Rajegaon என்னும் கிராமத்தில் பிறந்தவர் லலிதா (Lalita Salve) என்ற பெண். அவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார். 2013ஆம் ஆண்டு தனது உடலில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்ட லலிதா, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் பொலிஸ்: வீட்ல விசேஷமாம்... | Lalit Salve Maharashtra Police Constable

அப்போது, அவரது உடலில் Y குரோமோசோம் இருப்பது தெரியவந்தது. அதாவது, பெண்கள் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும் நிலையில், ஆண்கள் உடலில் X மற்றும் Y குரோமோசோம்கள் இருக்கும்.

ஆக, தான் ஆண் தன்மை உள்ளவர் என தெரியவரவே, 2018 முதல் 2020 வரை, மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து ஆணாக மாறினார் லலிதா, இப்போது அவர் பெயர் லலித் (Lalit Salve).

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் பொலிஸ்: வீட்ல விசேஷமாம்... | Lalit Salve Maharashtra Police Constable

2020ஆம் ஆண்டு, சீமா என்ற பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார் லலித்.

வீட்ல விசேஷம்

இந்நிலையில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய லலித், ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி 15ஆம் திகதி, லலித், சீமா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் பொலிஸ்: வீட்ல விசேஷமாம்... | Lalit Salve Maharashtra Police Constable

பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற நான் பயணித்த பாதை பல சிக்கல்கள் உள்ளதாக இருந்தது. ஆனால், பலர் எனக்கு ஆதரது தந்தார்கள். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டாள். தந்தையானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, எங்கள் குடும்பமும் மகிழ்ச்சியில் திழைக்கிறது என்கிறார் லலித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *