இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்த அங்கீகாரம்
2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து இடம்பிடித்துள்ளார்.
அத்தோடு, இந்த இரண்டு பட்டியல்களிலும் இந்திய வீராங்கனைகள் எவரும் தெரிவுசெய்யப்படவில்லை.
சமரி அத்தபத்து 2023 ஆம் ஆண்டில் திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் துறையில் அதிக கவனத்தைப் பெற்றார்.
மேலும், அவர் இந்த ஆண்டு பிக் பேஷ் லீக் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் திறமையை வெளிப்படுத்திய சாமரி அத்தபத்து இந்த வருட இந்திய மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பதும் ஆச்சரியமான விடயம்.