அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம் நடத்தும் 48வது ஆண்டு புனித சபரிமலை யாத்திரை தரிசனம்!
கொழும்பு 13 ஹின்னி அப்ஹாமி மாவத்தை ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரம் அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம் நடத்தும் 48வது ஆண்டு புனித சபரிமலை யாத்திரை தரிசனம்
கார்த்திகை முதலாம் திகதி முதல் கோயில் மண்டபத்தில் தனசரி நடைப்பெற்று வருகிறது
மார்கழி 12ம் நாள் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் கோயிலில் நடைபெற்று. மதியம்
ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய கோவிலில் மண்டபத்தில் மண்டல பூஜையும் மகேஸ்வர பூஜையும் நடைபெறும் 28ம் திகதி மௌன அலங்கார பூஜையும் 29ம் மஞ்சமாதா பூஜையும் 30ம் திகதி கருப்பண்ண சுவாமி பூஜையும் 31ம் திகதி குரு பூஜையும் நடைபெறும் அனைத்து பக்தர்களும் இவ் பூஜையில் கலந்து கொண்டு ஐயனின் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.
அதனை தொடர்ந்து
தலைமை குருசாமி பொன்.ரவிந்திரன் குருசாமி,இரா,செந்தமிழ்ச்செல்வன் குருசாமி சந்திரதாஸ் குருசாமி ஆகியோர் தலைமையில் 09ம் திகதி புனித சபரிமலை யாத்திரை மேற்கொள்வார்கள்