இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் 65 இடங்களை மையப்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, நாடு பூராகவும் 3,700 யாசகர்கள் உள்ளதாக அந்த அறிக்கை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,600 யாசகர்கள் உள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *