மருத்துவ தேவையாளர்களின் நன்மை கருதி யாழில் இலவச தங்குமிட வசதி

 

– ஐ. ஏ. காதிர் கான் –

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தருவோர், அவர்களின் தங்குமிட வசதிக்காக பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, யாழ். மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நலன் விரும்பி ஒருவர் ஊடாக, யாழ். வரும் நோயாளிகள் தங்கி நின்று சிகிச்சை பெறுவதற்கான மற்றும் நோயாளிகளைப் பராமரிப்போருக்கான இலவச தங்குமிட வசதி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சிரமங்களைத் தவிர்த்து, நேர்த்தியான நிர்வாக நடவடிக்கைகளை வழங்குவதற்கு வசதியாக, முன் கூட்டியே தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் – அஷ்-ஷைஹ்க் பைஸர் எம். அலியார் – காஸிமி – மதனி ( 0777155119 / 0778831938 ) என்பவரோடு தொடர்பு கொள்வதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

29/11/2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *