2024 ஆம் ஆண்டு இரண்டு தேர்தல்கள் – ஜனாதிபதி அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியன அடுத்த வருடம் தவறாது நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட பொது விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், உரையாற்றிய ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஏனைய தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், வரவு – செலவுத் திட்டத்திற்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.