அல் ஷிஃபா மருத்துவமனையில் பரிதாபகரமாக உயிரிழக்கும் நோயாளிகள்

காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனைக்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்பட்டதால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் மூன்று சிறு குழந்தைகள் பிறந்த குழந்தை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பு இயங்கி வருவதாக அண்மையில் வெளியான தகவலை அடுத்து இஸ்ரேலிய படைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து, தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தீர்ந்தது எரிபொருள் : அல் ஷிஃபா மருத்துவமனையில் பரிதாபகரமாக உயிரிழக்கும் நோயாளிகள் | 24 Patients Died In Al Shifa Hospital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *