நேற்று பதவிகளை பொறுப்பேற்ற ரணதுங்க இன்று வீடு திரும்பினார்

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க குறித்த குழுவில் இருந்து விலகியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் நியமிக்கப்பட்ட இந்த குழு தொடர்ந்து செயல்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை இன்று பிறப்பித்ததால் அர்ஜுன ரணதுங்க, குறித்த குழுவில் இருந்து விலகியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை இடைநிறுத்தி, இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவை நேற்று நியமித்தார்.

இதன் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சரின் தீர்மானத்தை எதிர்த்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

தீர்ப்பின் பிரகாரம் அமைச்சரால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு 14 நாட்களுக்கு செயல்பட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *