தப்பியோடிய மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் :சிதறி கிடக்கும் சடலங்கள்!

 

காசாவின் வடக்கு பகுதியிலிருந்து தமது உயிரை காப்பாற்றி கொள்ளும் நோக்குடன் தென்பகுதிக்கு தப்பிச் சென்ற மக்களின் கார் தொடரணிமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது. எனினும் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் செல்ல கடற்கரை பகுதி வீதியான ரஷீத்தை திறந்து வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.

இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பை நம்பி இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தமது கார்களில் அந்த வழியாக சென்றவேளை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் புதைகுழியாக மாறப்போகும் காசா : ஹமாஸ் சூளுரை
இஸ்ரேலின் புதைகுழியாக மாறப்போகும் காசா : ஹமாஸ் சூளுரை
சடலங்கள் வீதிகளில் சிதறி
இதில் கார்களில் சென்ற அனைவரும் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சடலங்கள் வீதிகளில் சிதறி காணப்படுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *