குமார தர்மசேனவிடம் பொலிஸார் நீண்ட நேரம் விசாரணை

சர்வதேச கிரிக்கெட் நடுவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான குமார தர்மசேனவிடம் நாரஹேன்பிட்டிய பொலிஸார் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பெறுமதியான காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறு குறித்தே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த அரை ஏக்கர் காணிக்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமார தர்மசேன, அவரது மனைவி மற்றும் பிந்தன்ன தோட்டக் கம்பனியின் 12 பேரின் வாக்குமூலங்களையும் நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *