இஸ்ரேலுக்கு ஹமாஸ் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்
லெபனானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா நகரின் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் சுமார் 12 ஏவுகணைகளை ஹமாஸ் ஏவியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
காசா வாழ் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானில் இருந்து கிரியாத் ஷ்மோனா நகரை ஏவுகணை மூலம் தாக்கியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.