கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து: இருவர் பலி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று(22) இரவு கட்டுநாயக்க பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *