யாழ்தேவி இரயிலில் மோதுண்டு 17 மாடுகள் உயிரிழப்பு

யாழ்தேவி இரயிலில் மோதுண்டு 17 மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 மாடுகள் காயமடைந்துள்ளன.

கொழும்பு – கோட்டை இரயில் நிலையத்தில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த யாழ்தேவி இரயில் யாழ்ப்பாணம், ஆனையிறவு இயிரத நிலையத்தை நெருங்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வடக்கில் கால்நடைகளுக்கு போதியளவு புல் இல்லாததன் காரணமாக கால்நடைகளை சுதந்திரமாக வெளியில் விடும் நிலைமை அண்மைக்காலமாக காணப்படுகிறது.

இந்தநிலையில், கால்நடைகள் புல் தேடி இரயில் பாதைக்கு வருவதால் விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரயிலில் அடிபட்ட 17 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இந்த மாடுகள் ஒரே மந்தையைச் சேர்ந்தவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த 17 கால்நடைகளின் பெறுமதி சுமார் முப்பது இலட்சம் ரூபா என உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *