மஹிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய சட்டத்தரணிகள் கோரிக்கை!
மைனாகோகம மற்றும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டங்களை வகுத்துக்கொடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்த வெண்டுகோளை முன்வைத்தார்.