கொழும்பின் பிரதான 04 பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு
கொழும்பின் பிரதான 04 பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
நாரஹேன்பிட்ட, கிருலப்பனை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இவ்வாறு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
3 வாரங்களுக்கு முன்னதாக குறித்த பகுதிகளில் நாளாந்தம் 2 டெங்கு நோயாளர்கள் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது அந்த எண்ணிக்கை 5 அல்லது 6 வரை அதிகரித்துள்ளதாக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார்.