லிட்ரோ எரிவாயு விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 4ஆம் லிட்ரோ நிறுவனம் அதன் எரிவாயு விலைகளை உயர்த்தியிருந்தது. 12.5 கிலோ எடையுடைய எரிவாயுவின் விலையை 145 ரூபாவால் லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் கடந்த ஆறுமாதங்களில் தொடர்ச்சியாக மூன்று முறை எரிவாயு விலைகளை குறத்திருந்தது.

என்றாலும், தற்போது மீண்டும் எரிவாயு விலைகளை லிட்ரோ நிறுவனம் அதிகரித்து வருகின்றது.

நாளை அல்லது நாளைமறுதினம் திருத்தியமைக்கப்படும் விலைகளில் மீண்டும் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக உள்ளதாக நிறுவனத்தின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *