மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை ..!

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவின் அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் வரி வருவாயை அதிகரிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்த குழு, அதுவரை  இரண்டாம் தவணை பணத்தை வழங்குவதை ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *