ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சி!

சீனாவும் கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 16 இலட்சம்கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சிப் வார் எனப்படும் தொழில்நுட்ப ரீதியிலான போர்
தற்போதைய நவீன உலகில் அனைத்து உலக நாடுகளுக்கும் தேவையான முக்கிய இரண்டு விடயங்களாக கருதப்படுவது ஒன்று கச்சா எண்ணெய் மற்றொன்னு குறைகடத்தி (semi conductor).
இந்த குறைகடத்தி (semi conductor) வர்த்தகத்தை யார் கட்டுப்படுத்தப்போகிறார்கள் என கேள்வி எழும் பட்சத்தில் இந்த போட்டியில் சீனா மற்றும் அமெரிக்கா களமிறங்குகின்றன.
இந்த பின்னணியில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக ஒரு சட்டம் ஒன்றை இயக்குகிறது. அதாவது processor நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் உடனடியாக அமெரிக்கா வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிறப்பான processor களை சீனாவுக்கு அனுப்பினால் அந்த நிறுவனத்தை தடைசெய்வோம் எனவும் ஒரு பகிரங்க தகவல் ஒன்றை வெளியிட்டது.
இதனால் சீனா அயல் நாடுகளிலிருந்து processor களை கொள்வனவு செய்யாமல் தங்கள் நாட்டிலே சிறப்பான processor களை உற்பத்தி செய்ய முடிவு செய்தது.
மேலும் அமெரிக்காவின் இந்த நகர்வினால் கோபமடைந்த சீனா, ஆப்பிள் சாதனங்களை அரச ஊழியர்களும் பயன்படுத்தவும் அரசு சம்பத்தப்பட்ட இடங்களுக்கு கொண்டுவருவதை தடை செய்தது.
இந்த சட்டம் மறைமுகமாக எதிர்காலத்தில் ஐபோன்களை முற்றாக தடைசெய்யும் பாதையிலே சீனா செல்கின்றது.
ஆனால் அமெரிக்காவையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலன பங்குகள் சீனாவில்தான் உள்ளன. இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சடுதியான வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *