கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

 

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் தினங்களில் நாளை (09) முதல் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று நீண்ட விளக்கமளிக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிகள் நாளை 9, 10, 12, 14, 15ஆம் திகதிகளிலும், இறுதிப் போட்டி 17ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும் நடைபெறவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *