அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நபர்!

தனக்கு சொந்தமான பொருட்களை பக்கத்து வீட்டுக்காரரின் ஆடுகள் சேதப்படுத்தியதால் அவரின் அந்தரங்க உறுப்பை பாதிக்கப்பட்ட நபர் கடித்து குதறியுள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் கங்காராம். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவை அவ்வப்போது கங்காராமின் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை கங்காராமின் வீட்டிற்குள் நுழைந்த ஆடுகள் விலை மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கங்காராம், பக்கத்து வீட்டுக்காரரான அந்த ஆடுகளின் உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் கீழே தள்ளி விட்டு அவரது அந்தரங்க உறுப்பை கடித்து குதறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வலியால் துடித்துப்போன ஆடுகளின் உரிமையாளர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அக்கம் பக்கத்தினர் சேர்த்துள்ளனர். ஆடுகள் அத்துமீறியதால் அதன் உரிமையாளர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரிடம் சம்பந்தப்பட்ட இருவருமே புகார் அளித்துள்ளார்கள். இதனை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்திய கங்காராம் மீது ஐ.பி.சி. பிரிவுகள் 323 தானாக முன்வந்து தாக்குதல் நடத்துதல், 504 உள் நோக்கத்துடன் அவமதித்தல், 506 மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
நடந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘கங்காராம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மருத்துவ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை கொடுத்துள்ளார்கள். முதல்கட்ட தகவலின்படி, அந்தரங்க உறுப்பின் வெளி பகுதியில்தான் காயம் ஏற்பட்டுள்ளது. உள்பகுதியில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அவர் பயப்படுவதுபோல் தாம்பத்தியத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. குணம் அடைந்த பின்னர் இயல்பான வாழ்க்கையை வாழலாம்’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *