பாடசாலைகளில் அபாயா அணிய தடை!

முஸ்லிம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயா பிரான்ஸ் நாட்டில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், பாடசாலைகளுக்கு தொடர் விசேட வழிகாட்டுதல்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரான்ஸ் அரசாங்கம் 2004 இல் பாடசாலைகளில் தலையை மூடுவதைத் தடை செய்தது மற்றும் 2010 இல் முழு முகத்தை மூடுவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்தது என்று வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *