ஒரே தடவையில் பிறந்த 3 குழந்தைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 3 குழந்தைகள் சுகப்பிரசவமாக இன்று (27) பிறந்துள்ளது.

மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.

குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *