ஒயின் உற்பத்தியை நிறுத்த தீர்மானம்!

பிரான்ஸ் நாட்டில் தற்போது அளவுக்கு அதிகமாக ஒயின் எனும் மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது.
இதனால் அங்கு ஒயின் உற்பத்தியினை நிறுத்த சொல்லி அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மதுபிரியர்கள் தற்போது ஒயின் பக்கத்தில் இருந்த தங்கள் பார்வையை பீர் பக்கம் திரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் ஒயின் தொழிற்சாலைகள் வேறு தொழில் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஒயின் பாட்டில்களை அழிப்பதற்கு பிரான்ஸ் அரசு அந்நாட்டு மதிப்பில் 200 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது.

ஐரோப்பிய ஆணையம் மதுபியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒயின் அருந்தும் பழக்கமும் குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த சரிவானது இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவீதம், பிரான்சில் 15 சதவீதம் என குறைந்துள்ளது. அதே சமயத்தில் உலகின் மிகப்பெரிய ஒயின் தயாரிப்பாளர்களான ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 சதவீதம் வரை ஒயின் உற்பத்தி உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *