விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொண்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  விடுமுறை வழங்குவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதாவது 18-08-2023 முதல் 27-08-2023 வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இரண்டு நாட்கள்  விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023.

அதன்படி, குறித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 28-08-2023 மற்றும் 29-08-2023 ஆகிய திகதிகளில்  விடுமுறை வழங்கப்பட உள்ளது.

இந்த  விடுமுறையை பெற, மேற்கூறிய அதிகாரிகள், மதிப்பீட்டு நடவடிக்கைகளில் தாங்கள் பங்கேற்றதற்கான வருகை சான்றிதழை சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *