இலங்கையர்கள் இருவர் கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழப்பு

பிரித்தானியாவில் வசித்து வரும் இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உயிரிந்த நபர்கள் 72 மற்றும் 62 வயதுடையவர்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போது வரை வெளிநாடுகளில் இலங்கையர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவுஸ்ரேலியாவில் ஒருவரும், இங்கிலாந்தில் இரண்டு பேரும், சுவிட்சர்லாந்தில் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *