வேன் – பஸ் மோதி 20 பேர் பலி

பாகிஸ்தானில் டீசல் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 20 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானில் 40 பயணிகளுடன் பேருந்து ஒன்றி கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிண்டி பட்டியான் அருகே டீசல் பீப்பாய்களை ஏற்றி வந்த வேன் மீது இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து மோதி வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். மேலும் 14 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு பிண்டி பட்டியான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *