நீர் கட்டணத்திற்கு சூத்திரம்!

நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதோடு, கட்டணம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர். எம். டபிள்யூ. எஸ். சமரதிவாகர தெரிவித்திருந்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலைத்தன்மையைப் பேணுவதுடன், அடுத்த மறுசீரமைப்பில் நீர்க் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி விவகாரங்களில் அதிக அழுத்தங்கள் இருப்பதாலேயே இந்த நீர் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *